உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளி ஆசிரியை மாற்றத்துக்கு எதிர்ப்பால் மீண்டும் நியமனம்

பள்ளி ஆசிரியை மாற்றத்துக்கு எதிர்ப்பால் மீண்டும் நியமனம்

ஆத்துார்: ஆத்துார், புங்கவாடி அரசு நடுநிலைப்பள்ளி யில், ஒன்றாம் வகுப்பு ஆசிரியையாக நிர்மலா என்பவர் பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன், அவர் இடமாற்றப்பட்டார். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கல்வித்-துறை அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து ஆசிரியை நிர்மலா, அதே இடத்தில் பணிபுரிய, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்-டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ