உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மகளுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு ஆயுள் சிறை

மகளுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு ஆயுள் சிறை

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த, 47 வயதுடைய கூலித்தொழிலாளி, அவரது, 17 வயது மகளுக்கு, 2021 ஆகஸ்டில், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் வழக்கு விசாரணை முடிந்து தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ