சிலவரி செய்திகள்: சேலம்
பெருமாள் கோவிலில்இ.பி.எஸ்., தரிசனம்ஓமலுார்: நங்கவள்ளி, பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில், அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., நேற்று தரிசனம் செய்தார். முன்னதாக, நங்கவள்ளி ஒன்றிய செயலர் மாணிக்கவேல் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அதேபோல், பா.ஜ.,வின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமையில் அக்கட்சியினரும், இ.பி.எஸ்.,க்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வைரவன் ஏரிக்கு செல்லும் வழியில், தேங்காய் விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளை, இ.பி.எஸ்., சந்தித்து, விலை நிலவரம் குறித்து கேட்டறிந்து சென்றார். அதேபோல் தாரமங்கலத்தில், இ.பி.எஸ்.,க்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.முதுகலை ஆசிரியர் தேர்வு851 பேர் 'ஆப்சென்ட்'சேலம்: தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு, சேலம் மாவட்டத்தில், 38 மையங்களில் நேற்று நடந்தது. இதற்கு, 197 மாற்றுத்திறனாளிகள் உள்பட, 13,113 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 12,262 பேர் தேர்வு எழுதினர். 851 பேர் வரவில்லை. 38 முதன்மை கண்காணிப்பாளர்கள், 38 துறை அலுவலர்கள், 668 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், தேர்வை கண்காணித்தனர். கலெக்டர் பிருந்தாதேவி, மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில், தேர்வை பார்வையிட்டார். ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்ளிட்ட கல்வித்துறையினர் செய்திருந்தனர்.'பனை மரங்களை வெட்டஅனுமதி பெற வேண்டும்'சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: பனை மரங்களை வெட்டும் முன், கட்டாயம் அனுமதி பெற வேண்டும். ஒரு மரத்தை வெட்டினால், 10 மரங்களை நட்டு பராமரிக்க அரசாணை உள்ளது. பனை மரத்தின் வேர் முதல் ஓலைகள் வரை, அனைத்தும் மக்களுக்கு பயன் தருபவை. அதன் முக்கியத்துவம் கருதி பனை மரங்களை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தவிர்க்க முடியாத காரணத்தால், பனை மரங்களை வெட்டுவோர், உழவர் நலத்துறையின் உழவர் செயலியில் மரம் வெட்ட அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பனை மரங்ககளை வெட்டி செங்கல் சூளைகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.