தியேட்டர் கேன்டீனில் தின்பண்டங்கள் பறிமுதல்
ஆத்துார்: ஆத்துார், கேசவேலு தெருவில் உள்ள சினிமா தியேட்டரில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் கண்ணன் தலைமையில் குழு-வினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பவுடர், தின்-பண்டங்கள் காலாவதி நிலையில் இருந்தது. இதனால், 4 கிலோ ஐஸ்கிரீம் தயாரிப்பு பவுடர், 2 கிலோ தின்பண்டங்களை பறி-முதல் செய்து அழித்தனர். தொடர்ந்து, 'நோட்டீஸ்' வழங்கி அப-ராதம் விதிப்பது குறித்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு அறிக்கை அனுப்பினர்.