உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற ஹெக்டேருக்கு ரூ.9,600 மானியம்

தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற ஹெக்டேருக்கு ரூ.9,600 மானியம்

மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குனர் மணிவாசகம் அறிக்கை:மகுடஞ்சாவடி வட்டாரத்தில் தனிப்பட்ட பட்டாதாரர், 2 ஆண்டுக்கு மேலாக பயிரிடாமல் தரிசாக வைத்துள்ள விவசாய நிலங்களை, மீண்டும் விளை நிலங்களாக மாற்ற விண்ணப்பிக்கலாம். தனிநபர் விவசாயிகளின் தரிசு நிலங்களில் புதர் நீக்கி சமன் செய்து உழுது பயிர் சாகுபடி செய்ய, ஹெக்டேருக்கு, 9,600 ரூபாய்- மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகபட்சம், 2 ஹெக்டேர், அதாவது, 5 ஏக்கர் வரை, இப்படி தரிசாக பயிரிடாமல் வைத்துள்ள விவசாய நிலத்தை விளைநிலமாக மாற்ற விண்ணப்பிக்கலாம்.நடப்பு, 2025 - -26ம் ஆண்டுக்கு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள எர்ணாபுரம், காளிகவுண்டம்பாளையம் ஊராட்சிகளில், சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் வரப்பு பயிராக பயறு வகை பயிர்களை பயிரிட, பயறு விதைகள், 300 -ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. மண்வளத்தை மேம்படுத்த உயிர் உரங்கள், 1.5 லிட்டர், 450 ரூபாய் -மானியத்தில் வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு, அப்பகுதி உதவி வேளாண் அலுவலர்களையோ அல்லது மகுடஞ்சாவடி வேளாண் துறை அலுவலகத்தையோ அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை