உழவர் சந்தை அருகே தற்காலிக கடைகள் அகற்றம்
மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் உள்ள, 13 உழவர் சந்தைகளில், 100 மீ., எல்லைக்குள் உள்ள தற்காலிக கடைகளை அகற்ற அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, இரு நாட்களாக அதிகா-லையில் சந்தை அருகே உள்ள தற்காலிக கடைகளை அகற்ற, மேட்டூர் நகராட்சி வாகனம் மூலம் அறிவிக்கப்பட்டது. நேற்று காலை சந்தை வெளியே இருந்த, 20க்கும் மேற்பட்ட தற்காலிக காய்கறி கடைகளை, போலீசார் உதவியுடன் அகற்றினர். இதனால் அப்பகுதியில் நுகர்வோர், வாகனங்களை நிறுத்தி விட்டு உழவர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கினர். இதன் எதிரொலி-யாக, மேட்டூர் உழவர் சந்தையில் விற்பனை அதிகரித்ததாக, விவ-சாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.