மாணவியிடம் சீண்டல் தற்காலிக ஆசிரியர் கைது
ஓமலுார்: ஈரோடு, கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 49. சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே குப்பூரில் உள்ள அரசு மாதி-ரிப்பள்ளியில், தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 2ல் பள்ளி மாணவ, மாணவியுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ஒரு சிறுமியிடம் பாலியல் சீண்-டலில், சிவக்குமார் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தெரிவித்-ததை அடுத்து, தலைமையாசிரியர் பாலமுருகன், நேற்று முன்-தினம், ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், 'போக்சோ' வழக்குப்பதிந்து, நேற்று சிவக்-குமாரை கைது செய்தனர்.