உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பனிப்பொழிவால் மல்லி விலை உயர்வு

பனிப்பொழிவால் மல்லி விலை உயர்வு

சேலம்: தமிழகத்தில் சில நாட்களாக சீதோஷ்ண நிலை மாறி மாறி வருகி-றது. பகலில் வெப்பம், மாலையில் பனி காணப்படுகிறது. சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து, பூக்கள் அதிகளவில் கருகி விடுகின்றன. இதனால், சேலம், வ.உ.சி., மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்-படும் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதற்கேற்ப கடந்த, 14ல், குண்டுமல்லி கிலோ, 1,600, ஜாதி-மல்லி, 800 ரூபாயாக இருந்தது. நேற்று முன்தினம், குண்டு-மல்லி, 2,000 ரூபாய், ஜாதிமல்லி, 1,000 ரூபாயாக உயர்ந்தது. இன்று முகூர்த்த நாள் என்பதால், நேற்றும் குண்டுமல்லி, ஜாதி-மல்லி விலை குறையவில்லை. தவிர சம்பங்கி, 100, சாதா சம்-பங்கி, 150, காக்கட்டான், 240, மலைக்காக்கட்டான், 160, அரளி, 120, மஞ்சள் அரளி, செவ்வரளி தலா, 200, நந்தியாவட்டம், 160, சின்ன நந்தியாவட்டம், 400 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி