உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியருக்கு அனுமதி

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியருக்கு அனுமதி

ஆத்துார்: ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வ-ராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா மைய திட்டத்தில் செயல்படுகிறது. கல்வராயன்மலை பகுதியில் பெய்த மழையால், கடந்த, 2 முதல், ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் வந்தது. இதனால் சுற்றுலா பயணியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 9 நாட்களுக்கு பின், நேற்று முதல், சுற்றுலா பய-ணியர் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்-கவும், பூங்காவுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி