ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கருவூல கண்காணிப்பாளர் கைது
ரூ.5,000 லஞ்சம் வாங்கியகருவூல கண்காணிப்பாளர் கைதுசேலம், செப். 28-சேலத்தில், தந்தையின் ஓய்வூதிய பணத்தை வழங்க, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, கருவூல கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஷர்மிலி, 45. இவரது தந்தை ரிக்பாஷா, கூட்டுறவு துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் இறப்பிற்கு பிறகு, ஓய்வூதியத்தை மகள் ஷர்மிலிக்கு வழங்க, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, கருவூல அலுவலகத்தை அணுகினார். அப்போது, தங்கள் பெயருக்கு ஓய்வூதிய பணத்தை மாற்றி தர, 5,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, ஓய்வூதிய பிரிவு கண்காணிப்பாளர் தனபால் கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பமில்லாத ஷர்மிலி, இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் தலைமையில், போலீசார் ஷர்மிலியிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர்.இதையடுத்து கலெக்டர் அலுவலகம் வந்த ஷர்மிலி, கண்காணிப்பாளர் தனபாலிடம், 5,000 ரூபாயை வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார், தனபாலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.