உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிலக்கரி சரிந்து இரு ஊழியர்கள் பலி; மேட்டூர் அனல் நிலையம் முன்பு உறவினர்கள் போராட்டம்

நிலக்கரி சரிந்து இரு ஊழியர்கள் பலி; மேட்டூர் அனல் நிலையம் முன்பு உறவினர்கள் போராட்டம்

சேலம்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இரு ஊழியர்கள் உயிரிழந்த நிலையில்,அவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நேற்று மாலை நிலக்கரி சரிந்து வெங்கடேசன், பழனிச்சாமி ஆகியோர் பலியாகினர். அவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், காலை 9.30 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டிய ஊழியர்கள், உள்ளே செல்ல முடியாமல் வெளியே நின்றிருந்தனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ