உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கணவர் இறந்த துக்கத்தில் மனைவி விபரீத முடிவு

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி விபரீத முடிவு

தலைவாசல் :சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, ஊனத்துார் தெற்குகாடு பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சதீஷ், 27. இவர், கடந்த நான்கு மாதத்திற்கு முன், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின், மனைவி கவுரி, 23, சரியாக சாப்பிடாமல் மன வேதனையில் இருந்துள்ளார். கணவர் இறந்த பின், வாழ பிடிக்கவில்லை என கடந்த, 15ல், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை