மேலும் செய்திகள்
பிளேடால் கழுத்தை அறுத்து வடமாநிலத்தவர் தற்கொலை
22-Aug-2025
தலைவாசல் :சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, ஊனத்துார் தெற்குகாடு பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சதீஷ், 27. இவர், கடந்த நான்கு மாதத்திற்கு முன், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின், மனைவி கவுரி, 23, சரியாக சாப்பிடாமல் மன வேதனையில் இருந்துள்ளார். கணவர் இறந்த பின், வாழ பிடிக்கவில்லை என கடந்த, 15ல், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
22-Aug-2025