சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு ஆயுள்
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலுார், காடையாம்பட்டி அருகில் காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ், 39, இவர் கடந்த, 2021ல், 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.இதில், அச்சிறுமி கர்ப்பம் அடைந்தார். பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, மாதேஸை கைது செய்தனர். இவ்வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், மாதேசுக்கு ஆயுள் தண்டனை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார்.