சிறுமியை சீண்டிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
சேலம்: சேலம், சிவதாபுரத்தை சேர்ந்தவர் தனபால், 23. வெள்ளி பட்டறை தொழிலாளியான இவர் கடந்த 2020 பிப்., 5ல், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகார்படி, சேலம் டவுன் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனபாலை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் தனபாலுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி நேற்று உத்தரவிட்டார்.