சுற்றுலா பயணிகள் குறைவால் வெறிச்சோடிய ஏற்காடு
ஏற்காடு: சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு, கடந்த வாரம் முழுவதும் பொங்கல் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் அதிகள வில் வந்தனர். இதனால் ஏற்காட்டில் உள்ள படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, லேடி சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், கரடியூர் காட்சி முனை போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்பட்டனர்.இந்நிலையில், தொடர் விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால், கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாக காணப்-பட்ட அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் தாவரவியல் பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகள் வராததால் அந்த இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் படகு இல்-லத்தில், குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே படகு சவாரி செய்தனர்.