காது கேளாமை பரிசோதனைக்கு ஹியரிங் எய்ட் சென்டரை அணுகலாம்
சேலம், கண், உடல் பரிசோதனைகளை போல காதுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, பரிசோதனை செய்ய வேண்டும். கேட்கும் திறன் குறைந்திருப்பதை, ஆரம்ப கட்டத்திலேயே அறிந்து கொள்ளும் போது எளிதாக சரி செய்யலாம்.ஹியரிங் எய்ட் சென்டர் நிறுவனம், காது கேட்கும் திறனை பரிசோதனை செய்வதற்காக, இந்தியாவில் முதல் தனித்துவமான நிறுவனமாக, 1980ல் சென்னையில் தொடங்கியது. தற்போது, தமிழகம் மற்றும் பெங்களூரு, ஐதராபாத் என, 25க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. ஹியரிங் எய்ட் சென்டரில் செவித்திறனை கம்ப்யூட்டர் மூலம் பரிசோதனை செய்து, காது கருவியை பொருத்தி கொள்ளலாம்.அனைத்து கிளைகளிலும், இந்திய மறுவாழ்வு கவுன்சில் பதிவு பெற்ற செவித்திறன் நிபுணர்கள் உள்ளனர். காதுக்குள் அணியும் மிகச்சிறிய காது கருவி முதல், முன்னணி நிறுவனங்களின் அனைத்து வகை காது கருவிகளும் கிடைக்கிறது. காது கேளாமைக்கு, ஒவ்வொருவருக்கும் ஏற்ப தனித்துவமான அறிவியல் தீர்வுகளை வழங்குவதில் சிறந்த நிறுவனமாக ஹியரிங் எய்ட் சென்டர் திகழ்கிறது.ஹியரிங் எய்ட் சென்டர் 4 ரோடு, சேலத்திலும், பெருந்துறை ரோடு, ஈரோட்டிலும் செயல்படுகிறது. மேலும் விபரம் பெற, 75400 35321 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.