உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ‛போக்சோவழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை * சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு  

‛போக்சோவழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை * சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு  

சிவகங்கை:தேவகோட்டையில் 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உதையாச்சி முருகன் மகன் அஜீத்குமார் 23. இவர் 2018 ம் ஆண்டு நவ., 13 ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் தாய் தேவகோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அஜீத்குமாரை ‛போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அஜீத்குமாருக்கு 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலட்சுமி வாதாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை