உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆவணிப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்

ஆவணிப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் ஆவணிப்பட்டியில் நடந்த சுதந்திர தின மாட்டு வண்டிப்பந்தயத்தில் 36 வண்டிகள் பங்கேற்றன.கிராமத்தார்கள், இளைஞர்கள், சிங்கப்பூர் வாழ் இளைஞர்களால் சுதந்திர தின மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்படுகிறது.பெரியமாடு, சிறிய மாடு ஆகிய பிரிவுகளில் ஆவணிப்பட்டி - கீழச்சிவல்பட்டி ரோட்டில் பந்தயம் நடந்தது. பெரியமாடு பிரிவில் 10 ஜோடிகளும், 6 மைல் துாரமுள்ள சிறிய மாடு பிரிவில் 26 ஜோடிகளும் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை