உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் விலை குறைந்த தக்காளி

மானாமதுரையில் விலை குறைந்த தக்காளி

மானாமதுரை : மானாமதுரையில் கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி நேற்று வாரச்சந்தையில் சற்று விலை குறைந்து ஒரு கிலோ ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்டது.மானாமதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு விதமான பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.80லிருந்து ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று வாரச்சந்தையில் சற்று விலை குறைந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.கடந்த வாரம் பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் ஒரு கிலோ ரூ.240க்கும், பச்சை மொச்சை ஒரு கிலோ ரூ.80க்கும், சின்ன பாகற்காய் ரூ.260 க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட காலிபிளவர் பெரியது ஒன்று இந்த வாரம் விலை குறைந்து ரூ. 40-க்கும், சிறியது ரூ. 30க்கும் விற்பனை செய்யப்பட்டது.வியாபாரிகள் சிலர் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்துள்ளதால் விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி