மரத்தில் பெண் பிணம் போலீசார் விசாரணை
சிவகங்கை: நாட்டரசன்கோட்டையில் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் உடல் மரத்தில் அழுகிய நிலையில் தொங்கியது. உடலை மீட்டு போலீசார் விசாரிகின்றனர்.சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள காட்டு பகுதியில் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மரத்தில் துாக்கிட்ட நிலையில் உடல் அழுகி இறந்த நிலையில் இருந்தார்.நேற்று அந்த வழியாக சென்ற ஒருவர் சிவகங்கை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டரை வர வழைத்து பிரேத பரிசோதனை செய்தனர். அந்த பெண் யார், அங்கு வந்து எப்படி இறந்தார் என தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.