உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாலங்களில் செடிகள் அகற்றம்

பாலங்களில் செடிகள் அகற்றம்

திருப்புவனம் : மதுரையில் இருந்து பரமக்குடி வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, கமுதக்குடி உள்ளிட்ட இடங்களில் 11 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் உள்ள இடைவெளியில் மரங்கள் வளர்ந்து பாலத்தின் தாங்கு திறனை பாதித்து வருகிறது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து பாலங்களின் பக்கவாட்டில் வளர்ந்த மரங்களை ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை