பள்ளிகளுக்கு கருவி வழங்கல்
சிவகங்கை : சிவகங்கையில் 60 அரசு நடுநிலை பள்ளிகளுக்கு, எதிர்கால பள்ளிகள் என்ற நோக்கத்தில் மெய்நிகர் கருவியை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார். விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.