மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
9 hour(s) ago
பயிற்சி முகாம்
9 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
9 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
9 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
9 hour(s) ago
திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சியில் முக்கிய வீதிகளில் வைப்பதற்காக வாங்கப்பட்ட குப்பை தொட்டிகள் பயன்பாட்டிற்கு வராமல் கடந்த ஒரு வருடமாக வீணாகி வருகின்றன. திருப்புவனம் கடை வீதி உள்ளிட்டவற்றில் குப்பைகளை சேகரிக்க முடியாமல், துாய்மை பணியாளர்கள் திணறுகின்றனர். அனைத்து குப்பைகளையும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கொட்டுவதால் சுகாதார கேடு நிலவி வருகிறது.மேலும் குப்பை தரம் பிரிக்கப்படாமல் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் ஒரே இடத்தில் கொட்டப்படுகிறது. இதனை தவிர்க்கவும் திருப்புவனம் பேரூராட்சி வீதிகளில் குப்பைகளை எளிதாக சேகரிக்க குப்பை தொட்டிகள் பொருத்த திட்டமிடப்பட்டு ஒரு குப்பை தொட்டி 40 ஆயிரம் வீதம் எட்டு லட்சம் ரூபாய் செலவில் 20 குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டன.இந்த தொட்டிகளில் சேகரமாகும் குப்பையை எளிதாக பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவற்றில் கொட்டி எடுத்து செல்ல வசதியாக தரையில் இருந்து மூன்று அடி உயரத்தில் பொருத்தப்படும். சென்னை, மதுரை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ளது போன்ற இந்த குப்பை தொட்டிகளை பொருத்துவதால் குப்பைகளை எளிதாக சேகரிக்க முடியும், ஆனால் இந்த குப்பை தொட்டியை வாங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும் தெருக்களில் இன்று வரை பொருத்தாமல் திருப்புவனம் கோட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.வெயிலிலும் மழையிலும் இந்த குப்பை தொட்டிகள் வீணாகி துருப்பிடித்து வருகின்றன.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago