உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டில் 25 பவுன் கொள்ளை

வீட்டில் 25 பவுன் கொள்ளை

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பூட்டிய வீட்டை திறந்து 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சரவணன் பிரியாணி கடை மாஸ்டர். நேற்று சரவணன் கடைக்குச் சென்றதும், மனைவி சுமதி காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தோப்புக்கு சென்றார். மதியம் 12:30 மணிக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சரவணன் அளித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி