உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சொத்து வரி செலுத்தினால்  5 சதவீதம் ஊக்கத்தொகை

சொத்து வரி செலுத்தினால்  5 சதவீதம் ஊக்கத்தொகை

சிவகங்கை,: சொத்து வரி முன்னதாக செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் தெரிவித்தார்.அவர் கூறுகையில், நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 பிரிவு 268 படி 2024--25 இரண்டாம் அரையாண்டுக்கான அக்.2024 முதல் மார்ச் 2025 வரையிலான காலத்திற்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை அக்.31க்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம். அக்.31க்குள் செலுத்தாதவர்களுக்கு நிகர சொத்துவரியில் ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இரண்டாம் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை அக்.31க்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறும். ஒரு சதவீத அபராத தொகை செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். சொத்து வரியை நகராட்சி கணினி வரிவசூல் மையத்தில் செலுத்தலாம். அல்லது http://tnurbanepay.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவும் செலுத்தலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை