சாக்கோட்டையில் 75 ஆடுகள் வெட்டி பக்தர்களுக்கு விருந்து
காரைக்குடி: காரைக்குடி அருகே சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன் கோயிலில், பக்தர்களுக்கு 75 ஆடுகளை வெட்டி, 2.5 டன் அரிசியில் கறிவிருந்து படைத்தனர். இக்கோயிலில் ஆடி படையல் விழா நடந்தது. அம்மனுக்கு ஆடுகள் வெட்டி நேர்த்தி செலுத்தினர். பின்னர் கறி விருந்து படைத்தனர். இந்த விருந்தில் சாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்று விருந்து சாப்பிட்டனர்.