கலைத் திருவிழா போட்டி
சிவகங்கை : பாகனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாகனேரி குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டி நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் கஸ்துாரிபாய் தலைமை வகித்தார்.ஆசிரியர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தாவீது வரவேற்றார். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் வட்டார அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் கலந்து கொள்ளலாம். சிவகங்கை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த கலைத் திருவிழா போட்டி நகராட்சி தலைவர் துரைஆனந்த் தலைமையில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் இந்திராணி முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியர் மரியசெல்வி வரவேற்றார். குறுவள மைய அளவில், முதல் மூன்று மாணவர்களும், வட்டார அளவில் முதல் மாணவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் இப்போட்டி மாவட்ட, மாநில அளவில் நடைபெறும்.