உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை

ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தவர் தற்கொலை செய்துகொண்டார்.எஸ்.புதுார் ஒன்றியம் குறும்பலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் பிரேம்குமார் 21. கோயம்புத்தூரில் டூவீலர் மெக்கானிக்காக இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கு பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்றதாக, போலீசார் இவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். சிறையில் இருந்து ஜாமினில் வந்த நிலையில் நேற்று குறும்பலுாரில் உள்ள தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி