மானாமதுரையில் சைக்கிள் கடைக்குள் புகுந்த கார்: ஒருவர் காயம்
மானாமதுரை: மானாமதுரையில் சைக்கிள் கடைக்குள் புகுந்த கார் மோதி ஒருவர் காயமுற்றார். மதுரை மாவட்டம் மேலுாரை சேர்ந்த குடும்பத்தினர் காரில் மானாமதுரை வழியாக தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சோனையா கோயில் பகுதியில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோடு திருப்பத்தில் இருந்த சைக்கிள் கடைக்குள் புகுந்தது. இதில் சைக்கிள் கடையில் வேலை பார்த்த பிரபு 48, காயமுற்றார். மானா மதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.