உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

தேவகோட்டை : தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி, உதவி தலைமையாசிரியர் செல்வக்குமார், காவலர் மரியசிங்கராயர் ஓய்வு பெறுவதை தொடர்ந்து மூன்று பேருக்கும் பாராட்டு விழா பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா தலைமையில் நடந்தது. தாளாளர் குழந்தைராஜ் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் ஸ்டீபன் மிக்கேல்ராஜ் வரவேற்றார். கல்வித்துறை துணை இயக்குநர் சண்முகநாதன், ஆசிரியர்கள் தேவராசு, மைக்கேல் குரூஸ், பள்ளி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பாண்டியராஜன், முன்னாள் மாணவர் மன்ற நிர்வாகி ஜேம்ஸ் டேவிட், மாணவர் மைதீன் ஆசிரியர் அன்பரசன், ஆசிரியர் சங்க செயலர் செபாஸ்டின் ராஜேந்திரன் பேசினர். ஆசிரியை வெண்ணிலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை