உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா இன்று துவக்கம்

தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா இன்று துவக்கம்

மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, பூஜை நடைபெற உள்ளன. பங்குனி பொங்கல் விழா 24ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 4:00 மணிக்கு கோயில் பூஜாரி சுப்பிரமணியன் தலைமையில் பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பூ கரகம், தீச்சட்டி, ஆயிரங்கண் பானை மற்றும் அலகுகள் குத்தி ஊர்வலமாக வந்து கோயிலுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் இறங்கி அம்மனை வழிபட உள்ளனர். விழா நடைபெறும் நாட்களின் போது அம்மன் வீதி உலாவும் கோயிலின் முன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !