உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தி.மு.க., பிரமுகருக்கு 12 ஆண்டு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தி.மு.க., பிரமுகருக்கு 12 ஆண்டு

சிவகங்கை : 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், தி.மு.க., பிரமுகர் ரமேஷ் 53, க்கு 12 ஆண்டு சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிவகங்கை ராஜாஜி தெருவை சேர்ந்தவர்ரமேஷ். தி.மு.க., நகர் இலக்கிய அணி அமைப்பாளராக இருந்தார். 2022 ம் ஆண்டில் பைனான்ஸ் நடத்தி வந்தார். வீடு தோறும் சென்று வட்டி வசூல் செய்யும் போது, ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு 2022 ம் ஆண்டில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் தாய் சிவகங்கை மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரமேைஷ கைது செய்தனர். வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் முன் நடந்தது. ரமேஷ்-க்கு 12 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை