எஸ்.புதுாரில் கிராமசபை கூட்டம்
எஸ்.புதுார் : எஸ்.புதுாரில் சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் புழுதிபட்டி - பொன்னமராவதி சாலையில் இருந்து மட்டாங்காடு, சங்கிலிக்கருப்பு சாலைகளுக்கு ரூ. 59.02 லட்சம் மதிப்பில் இணைப்புச்சாலை பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அரவிந்த், மகளிர் திட்ட இயக்குநர் கவிதாப்பிரியா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பிரேமராஜன் பங்கேற்றனர்.