உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சுகாதார ஆய்வாளர் சங்கம் கோரிக்கை

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சுகாதார ஆய்வாளர் சங்கம் கோரிக்கை

சிவகங்கை:'தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்'' என தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்க மாநில பொது செயலாளர் குமார் தெரிவித்தார். சிவகங்கையில் அவர் கூறியதாவது: சுகாதார ஆய்வாளர் நிலை 1, வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மருத்துவமல்லா மேற்பார்வையாளர், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர், மாவட்ட நலக் கல்வியாளர் உள்ளிட்ட பதவி உயர்வுக்கான கலந்தாய்வுகள் நடத்தப்படுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பணி ஓய்வு பெறுபவர்கள் தங்களது பதவி உயர்வு வாய்ப்பை இழக்கின்றனர். எனவே தாமதம் செய்யாமல் சுகாதார ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும். தொழில் வணிக, கல்வி நிறுவனங்களுக்கு சுகாதார சான்று வழங்கும் நடைமுறையில் அரசு தனது பொறுப்பை முற்றாக விலக்கிக் கொண்டதை கைவிட்டு தீயணைப்பு சான்று மற்றும் வருவாய்துறையில் உள்ளது போல் காலவரையறையுடன் கூடிய இணையவழியில் ஒப்புதல் வழங்கி சுகாதார சான்று வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். சுகாதார ஆய்வாளருக்கான தொகுப்பூதியத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்தியும், நிரந்தர பயணப்படியையும் வழங்க வேண்டும். மொத்தம் 1641 சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களில் 1621 காலியாக உள்ளதை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி