உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, கத்தரி விலை உயர்வு

மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, கத்தரி விலை உயர்வு

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளது.மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களாக விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி இந்த வாரம் ஒரு கிலோ ரூ. 70க்கும், நாட்டு கத்தரிக்காய் ரூபாய் 80க்கும், பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் ரூ.200க்கும், பல்லாரி வெங்காயம், சின்ன வெங்காயம் ரூ. 50க்கும், பச்சை மிளகாய் ரூ.60க்கும், பீட்ரூட், கேரட், அவரை ரூ. 60க்கும், முள்ளங்கி, சவ்சவ், சுரைக்காய் ரூ. 80க்கும் தேங்காய் சிறியதுஒன்று ரூ. 20க்கும், பெரியது ரூ.30 என விற்பனையாகி வருகிறது.வியாபாரிகள் கூறியதாவது:தக்காளி மற்றும் கத்தரிக்காய் போதிய வரத்து இல்லாமல் விலை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் அதன் விலையும் குறையும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ