குன்றக்குடி கோவில் யானை பலி பாகனை துாக்கியது வனத்துறை
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், 1971ல் குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலுக்கு, பெண் யானை சுப்புலட்சுமியை குட்டியாக வழங்கினார்.கடந்த 53 ஆண்டுகளாக குன்றக்குடி வரும் பக்தர்களின் செல்ல பிள்ளையாகவே அந்த யானை வாழ்ந்தது. செப்., 11 இரவு 11:00 மணிக்கு யானை தங்கியிருந்த தகர கொட்டகையில் தீப்பற்றி யானை தீக்காயமடைந்தது. செப்., 13 அதிகாலை 2:00 மணிக்கு அந்த யானை இறந்தது.மாவட்ட வன அலுவலர் பிரபாவதி தலைமையிலான வனத்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்தனர். அப்போது, யானையை அடக்க பயன்படும் அங்குசத்திற்கு, செப்., 11 இரவு 10:00 மணிக்கு விளக்கு ஏற்றி வழிபட்ட பாகன், விளக்கை அணைக்காமல் வீட்டிற்கு சென்று விட்டார். அந்த விளக்கிலுள்ள தீ பரவியதில் தான், யானை இறந்தது.இதையடுத்து, குன்றக்குடியை சேர்ந்த யானை பாகன் கார்த்தி, 45, என்பவரை, வனத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து, வன அலுவலர் பிரபாவதி கூறும் போது, ''யானை காலில் சங்கிலியால் கட்டாமல் நேரடி கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். ''ஆனால், விபத்து நடந்த அன்று, இரவு யானையின் காலில் சங்கிலியால் கட்டிவிட்டு, வீட்டிற்கு பாகன் சென்றார். கவனக்குறைவாக இருந்ததற்காக அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளோம்,'' என்றார்.