உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சம்பை ஊற்றில் பராமரிப்பு மே 10 ல் குடிநீர் நிறுத்தம்

சம்பை ஊற்றில் பராமரிப்பு மே 10 ல் குடிநீர் நிறுத்தம்

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் மே 10 அன்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக கமிஷனர் சங்கரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: காரைக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் சம்பை ஊற்று நீரேற்று நிலையத்தில், நாளை (மே 9) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், வீடுகளுக்கு வினியோகம் செய்ய மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுக்க முடியாது. இதன் காரணமாக காரைக்குடி மாநகருக்கு மே 10 ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ