மேலும் செய்திகள்
கொங்கு விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா
18-Mar-2025
சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளி கோயிலில் மார்ச் 30 ல் மண்டலாபிேஷக விழா நடைபெறும்.ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் கடந்த மாதம் கும்பாபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து மண்டல அபிேஷக பூஜை மார்ச் 30 ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 8:30 மணிக்கு மங்கள வாத்தியம், சங்கல்பம், விநாயகர் வழிபாடு, கலச பூஜை, யாகவேள்வி, வேதபாராயணம், திருமுறை பாராயணமும், மண்டலாபிேஷக பூஜைகளும் நடைபெறும்.அன்று மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். செயல் அலுவலர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் காளீஸ்வரி சரவணன், அறங்காவலர்கள் ராம்தாஸ், விஜயகுமார், சரவணன், சேகர் ஆகியோர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
18-Mar-2025