உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொடி நாள் வசூலில் சாதித்தவர்களுக்கு பதக்கம் 

கொடி நாள் வசூலில் சாதித்தவர்களுக்கு பதக்கம் 

சிவகங்கை: மாவட்டத்தில் 2022ல் கொடி நாள் வசூல் செய்த மாவட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆஷா அஜித் பாராட்டு சான்று, வெள்ளி பதக்கம் வழங்கினார். முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 2022ம்ஆண்டில் படைவீரர் கொடி நாள் வசூல் ரூ.5 லட்சம் வசூல் செய்ததற்காக முதன்மை கல்வி அலுவலர் (ஓய்வு) பாலுமுத்து, மாவட்ட பதிவாளர் கவிநிலவு, மகளிர் உதவி திட்ட அலுவலர் ராஜ்மோகன் ஆகியோருக்கு கவர்னரின் பாராட்டு சான்று, வெள்ளி பதக்கம் வழங்கினார். அதே போன்று ரூ.3 முதல் 5 லட்சம் வரை வசூல் செய்த காரைக்குடி பதிவாளர் இயலரசி, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு தலைமை செயலரின் பாராட்டு சான்று, வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நீரில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம்நிவாரண தொகையை கலெக்டர் வழங்கினார்.'ஆப்பரேஷன் சிந்துார்' போரில் பணிபுரிந்த படைவீரர்கள் நலனுக்காக, மன்னர் மேல்நிலை பள்ளி மாணவர் மனோஜ்குமார் தனது சேமிப்பு நிதி ரூ.1550யை கலெக்டரிடம் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கலெக்டர் பி.ஏ.,க்கள் (பொது) முத்துக்கழுவன், (நிலம்) கீர்த்தனா மணி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை