மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய அளவில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் தயார்படுத்தும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்பு மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 500 பேர் கலந்துகொண்டனர். ஆசிரியர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.