மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் பூக்குழி
25-Mar-2025
திருப்புத்துார் : திருப்புத்துார் நாகராஜ் நகர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.இக்கோயிலில் பங்குனி பால் குடத்திருவிழா நடைபெறும். ஏப்.8 ல் காப்புக் கட்டி விழா துவங்கியது. தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு விரதம் துவங்கினர். தினசரி இரவு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தன. பக்தர்கள் கும்மி கொட்டி வழிபட்டனர்.நேற்று நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, கரகம் எடுத்தும், அலகு குத்தியும் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். முத்துமாரியம்மன் கோவில் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
25-Mar-2025