சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
சிவகங்கை: சிவகங்கை ஒன்றியத்தில் விதிகளை மீறி சத்துணவு ஊழியருக்கு கூடுதல் பொறுப்பு, பணியிட மாறுதல் வழங்குவதை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்லம்மாள் வரவேற்றார். மாநில துணை தலைவர் மிக்கேலம்மாள் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் குமரேசன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒன்றிய பொருளாளர் செல்வி நன்றி கூறினார்.