தகராறில் ஒருவர் கைது
சிவகங்கை: சிவகங்கை அருகே வெட்டிக்குளம் ராஜசேகர் 37. இவருக்கும் மறவமங்கலம் ஆசை தம்பிக்கும் 32, சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. அக்., 18 அன்று இரவு 8:30 மணிக்கு ஆசை தம்பி, கண்ணன் 36, குண்டாக்குடை செல்வா 25, ஆகியோர் சேர்ந்து ராஜசேகரை கட்டையால் அடித்தும், மது பாட்டிலால் தாக்கியுள்ளனர். காளையார்கோவில் போலீசார் கண்ணனை கைது செய்தனர்.