டிராக்டரில் மோதி ஒருவர் பலி
இளையான்குடி, : இளையான்குடி அருகே உள்ள வடக்கு அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் கலைச்செல்வம் 55, கந்தசாமி மகன் பாலகிருஷ்ணன் 64.உறவினர்களான இவர்கள் இருவரும் பிப்.2ம் தேதி டூவீலரில் கோட்டையூர் சென்ற போது நின்று கொண்டிருந்த டிராக்டரில் மோதியதில் கலைச் செல்வத்திற்கு தலையில் காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.