மகளை நினைத்து வருந்திய பெற்றோர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி
காரைக்குடி : காரைக்குடியில் மகளை நினைத்து வருந்தி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் 9 வயது சிறுமி பலியானார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் என்.எஸ்.கே தெருவை சேர்ந்தவர் லிங்கம் 35. ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் விஷாலினி 9. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். குழந்தையை வளர்ப்பதில்சிரமம் ஏற்படும் என்று நினைத்த கணவன் மனைவி இருவரும் உணவில் விஷம் கலந்து அவர்களும் சாப்பிட்டு மகளுக்கும் கொடுத்துள்ளனர். லிங்கம் தனது உறவினருக்கு தகவல் தெரிவித்துஉள்ளார். உறவினர்கள், மூவரையும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பலியானார். லிங்கம் அவரது மனைவி பானுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.