உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் தொடர் மின்வெட்டு மக்கள் அவதி

தேவகோட்டையில் தொடர் மின்வெட்டு மக்கள் அவதி

தேவகோட்டை : தேவகோட்டையில் எவ்வித முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்வெட்டு செய்வதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேவகோட்டை, சுற்றுப்புற கிராமங்களில் 15 நாட்களாக அதிகாலையில் மின்வெட்டு செய்கின்றனர். எந்தவித முன் அறிவிப்பின்றி மின்வாரியத்தினர் மின்வெட்டு செய்து வருகின்றனர். மிதமான மழை பெய்ய துவங்கியவுடன் மின்வெட்டு செய்து, பல மணி நேரம் மீண்டும் மின்சாரம் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, அடிக்கடி பழுதாகும் மின் டிரான்ஸ்பார்மர்கள் குறித்து ஆய்வு செய்து, சீரமைப்பு செய்து தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கின்றோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை