உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.நேற்று மாலை 5:00 மணிக்கு பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யார்கள் நந்திதேவருக்கும், உற்ஸவ சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு அபிேஷக, ஆராதனை நடத்தினர். பின்னர் உற்ஸவ சுவாமியும்,அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருள தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி கோயில் பிரகாரங்களில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சிங்கம்புணரி: சிங்கம்புணரி சிவன் கோயில்களில் ஆனி பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி, சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு அபிஷேகம், சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில்களிலும், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை