உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாளை ரேஷன் குறைதீர் கூட்டம் 

நாளை ரேஷன் குறைதீர் கூட்டம் 

சிவகங்கை; அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை (ஜூன் 14) ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஜூன் 14 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடக்கும். இதில், கார்டுதாரர்கள் பங்கேற்று ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் பெறுதல், அலைபேசி எண் பதிவு, மாற்றம் செய்யலாம். மேலும், ரேஷன் கடைகள் குறித்த புகார்களை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை