உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொழிலாளர் நல வாரியத்தில் புதன் தோறும் சிறப்பு முகாம் 

தொழிலாளர் நல வாரியத்தில் புதன் தோறும் சிறப்பு முகாம் 

சிவகங்கை : ஆன்லைனில் பொருட்களை வினியோகம் செய்யும் ஊழியர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் வாரந்தோறும் புதனன்று பதிவு செய்யலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இதற்கான சிறப்பு முகாம் சிவகங்கை தொழிலாளர் நல உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு) அலுவலகத்தில் வாரந்தோறும் புதனன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறும்.தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், இயற்கை மரணம், பென்ஷன் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கப்படும். இச்சிறப்பு முகாமை பயன்படுத்தி, தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை