போதிய பஸ் வசதி இல்லாததால் படிகளில் மாணவர்கள் பயணம்
காரைக்குடி: காரைக்குடியில் டவுன் பஸ்களில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பயணம் மேற்கொள்வதால், காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.சாக்கோட்டை, புதுவயல், மானகிரி, பள்ளத்துார், அமராவதிபுதுார் என சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் காரைக்குடிக்கு டவுன் பஸ்களில் வந்து செல்கின்றனர். வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்ல குறிப்பிட்ட பேருந்துகளை மட்டுமே நம்பி உள்ளனர். இதனால், டவுன் பஸ்களில் கூட்டம் நிரம்பி, படிகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.